ஆபரணங்களை இரும்பு அலமாரியில் வைக்கலாமா?
பணம், மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை மரப்பெட்டியில் வைத்தால் மிகுந்த யோகம் தரும். மரம் வளரும் ஆற்றலைப் பெற்றது!. ஆகவே, அதில் வைக்கும் பொருள்களும் மேலும், மேலும் வளர வாய்ப்பு உண்டு. வைக்கும் நகைகளைப்போல பல மடங்கு நகை வாங்கும் வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் மரப்பெட்டியில் வைப்பதால் கிடைக்கும் என்பார்கள். முற்காலத்தில் மரப்பெட்டகத்தைத்தான் உபயோகித்தார்கள்!. ஆகவே பணம், மற்றும் ஆபரணங்களை மரப்பெட்டகத்தில் வைத்து , அதை ஸ்டீல் பீரோவில் வைப்பதன் மூலம் நல்ல பலன் கிட்டும்!.

