Friday, May 1, 2015

PLEASE RECOMMEND THIS BLOG ON GOOGLE!

My humble request to all readers!

After reading this blog, please recommend it on Google. You can do this by clicking a link given at the bottom of each post.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
இந்த வலைப்பூவில் உள்ளவற்றை படித்த பிறகு தயவு செய்து கீழே உள்ள Recommend this on Google என்ற இடத்தில் க்ளிக் செய்து google-இல் இதை பரிந்துரைக்கவும்.நன்றி !

ஸ்லோகங்கள் உங்கள் நலனுக்காக !



ஆஞ்சநேயர் மற்றும் கார்ய சித்தி ஸ்லோகங்கள்
வெளியே புறப்படும் போது!
அஞ்சனா நந்தனம் வீரம் ஜானகி சோக நாசனம்
கபீஷமக்ஷ ஹந்தாராம் வந்தே லங்கா பயங்கரம்
தத்துவ ஞானம் ஏற்பட
ஓம் சுத்தோ புத்தோ நித்யமுக்தோ
யுக்தா காரோஜயத் ப்ரத:
ப்ரளயோமித மாய்ச்ச
மாயாதீதோ விமத்ஸர:
நவக்ரஹ தோஷம் விலக
ஓம் வருணோ வாயுகதிமான்
வாயு கௌபேர ஈஸ்வர :
ரவிஸ் சந்திர குஜஸ்ஸௌம்யொ
குருக் காவ்யோ சனைச்வர :
ராகு கேது மருத்தோதா
தாதா ஹர்தர ஸமீரஜ :
ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாராகி
ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவனெம்மை அளித்துக் காப்பான்
ஆஞ்சநேயர் காயத்ரி
ராம தூதாய வித்மஹே
அன்ஜநீ புத்ராய தீமஹி :
தன்னோ மாருதி ப்ரசோதயாத்!!
காரியங்களில் வெற்றி பெற
ஸ்ரீ ராமதூத் மகாதீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ!
அஞ்சனா கர்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே !!
ஸ்ரீ மாருதி க்ருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வாபத்கந வாரகம் !!
அபார கருனாமூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்
கார்ய சித்திக்கு
ஓம் அஸாத்யஸ் சாதக  ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹாப்ரஞ்ய
மம கார்யம் ஸாதயா
வித்தையில் தேர்ச்சி, ஞாபக சக்திக்கு
ஓம் புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயதவம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

விவாஹம் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே
மகாயோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம :

சத்ரு உபாதை நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகன் நாதோ
ஜகதீசோ ஜநேச்வர
ஜகத் பிதா ஹரிச்ரீகோ
கருடஸ்மய  பஞ்சன :

கடன் தொல்லையிலிருந்து விடுபட
ஓம் குணத்ரய ஹரஸ் சூக்ஷ்ம
ஸ்தூல ஸர்வ கதப்புமான்
அபஸ்மார ஹரஸ்மர்த்தா
ஸ்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு :

குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷம் விலக
ஓம் துஷ்ட க்ரஹ நிஹந்தாச:
பிசாச க்ரஹ காதுக :
பாலக்ரஹ விநாசீச
தர்மோநேதா க்ருபாகர :


பூத, பிரேத பிசாச உபத்ரவம் நீங்க
ஓம் புண்யஸ்லோக பராராதிர்
ஜ்யோதிஷ்மான் சர்வரீபதி :
கிளிகில்யா ரவஸ்ரச்த
பூத பிரேத பிசாசக :

ஏவல், பில்லி சூன்ய உபத்ரவம் நீங்க
ஓம் பரபிசார  சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவ்த்வார நிகேதனம்

TAMIL SONGS(COVER) DONE BY ME WITH KARAOKE(தமிழ் திரைப் பாடல்கள் என் குரலில் -KARAOKE)

PLEASE LISTEN TO MY SONGS MADE WITH KARAOKE!
Please click this link and listen the uploaded songs: http://yourlisten.com/search/DRMGM

Saturday, April 18, 2015

EMERGENCY ACUPRESSURE POINT( அவசர சிகிச்சை அகுபிரஷர் புள்ளி )

If anybody is in emergency, e.g. if any one has fainted or become unconscious, apply firm pressure on the point  region on the patient) indicated by the red dot in the picture, for 3 minutes. This is an emergency acupressure point.
யாராவது மயக்கம் ஏற்பட்டோ, சுயநினைவு இழந்து ஆபத்தான நிலைமையில் இருந்தால் இப்படத்தில் குறிப்பிட்ட சிவப்பு நிறப் புள்ளி உள்ள பகுதியில் அந்த நபருக்கு, 3 நிமிடம் விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். இது ஒரு அவசர கால சிகிச்சைக்கு உதவும் அக்குப்ரஷர் புள்ளியாகும்.

பனை நுங்கின் பயன்கள் ( இந்த கோடை காலத்திற்கு உகந்தது)…




பனை நுங்கை சாப்பிட்டால்


பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை நுங்கு நன்மைகள் பல தரக் கூடியது ஆகும். 


பனை நுங்கிற்கு கொழுப்பைக்கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் பனை நுங்கை சாப்பிடலாம். பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச் சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே பனைநுங்கு மருந்தாக பயன்படுகிறது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் கு்டித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.


இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மரு ந்தாகும். நுங்கில் காணப்படும் ஆந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும்.


(Content Courtesy: vidhai2virutcham).


 

Sunday, February 22, 2015

H1N1 SWINE FLU TREATMENT IN HOMOEOPATHY

Homoeopathy has been found beneficial in preventing influenza and also treating Swine flu cases. Homoeopathic medicines like Influenzinum, Oscillococcinum are preventive and Pulsatilla, Bryonia and Arsenicum album have been found to cure Swine flu.

வரகு அரிசி புலாவ்

வரகு அரிசி புலாவ் 




வரகு அரிசி- 1 கப்
பட்டை- 1
கிராம்பு-4
பிரியாணி இலை -1
பச்சை மிளகாய்-2
சோம்பு - 1 ஸ்பூன்
புதினா - 10-13 இலைகள்
உப்பு- தேவைக்கேற்ப
தண்ணீர்- 1 1/2 கப்
நெய்/என்னை - 1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிப்ளவர் )
வெங்காயம் - நீளமாக நறுக்கியது
இஞ்சி-பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

வரகு அரிசியை தண்ணீரில் களைந்து வைக்கவும். பின் குக்கரில்  நெய்யை சூடாக்கி பட்டை, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை  ஆகியவற்றை வதக்கவும். பின் வெங்காயத்தை பிரவுன் ஆகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மற்றும் பச்சை மிளகாய், புதினா போட்டு வதக்கவும். பின் இத்துடன் காய்கறிகளையும், உப்பும்  போட்டு வதக்கி , 1 1/2 கப் தண்ணீர்  விட்டு கொதி வந்தவுடன் , களைந்து வைத்த வரகு அரிசியைப் போட்டு, குக்கரை மூடி , 12 நிமிடங்கள் மிதமான  தீயில் வேக வைக்கவும். (விசில் தேவையில்லை. விசில் வைக்க வேண்டுமானால், 1 விசில் வந்தவுடன் அணைக்கவும்). வெந்த பிறகு, கொத்துமல்லித் தழை போட்டு அலங்கரித்து, வெங்காய ரைத்தாவுடன் பரிமாறவும்.