Sunday, November 10, 2013

லக்ஷ்மி கணபதி
குன்றக்குடி சண்முகநாதன் வீற்றிருக்கும் மலைக்குச் செல்லும் வழியில் கணபதி , லக்ஷ்மி கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் லட்சியங்கள் நிறைவேறும்!.
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

ஆபரணங்களை இரும்பு அலமாரியில் வைக்கலாமா?
பணம், மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை மரப்பெட்டியில் வைத்தால் மிகுந்த யோகம் தரும். மரம் வளரும் ஆற்றலைப் பெற்றது!. ஆகவே, அதில் வைக்கும் பொருள்களும் மேலும், மேலும் வளர வாய்ப்பு உண்டு. வைக்கும் நகைகளைப்போல பல மடங்கு நகை வாங்கும் வாய்ப்பும், பொருளாதார முன்னேற்றமும் மரப்பெட்டியில் வைப்பதால் கிடைக்கும் என்பார்கள். முற்காலத்தில் மரப்பெட்டகத்தைத்தான் உபயோகித்தார்கள்!. ஆகவே பணம், மற்றும் ஆபரணங்களை மரப்பெட்டகத்தில் வைத்து , அதை ஸ்டீல் பீரோவில் வைப்பதன் மூலம் நல்ல பலன் கிட்டும்!.
உள்ளூரில் திருமணம் அமையும் வாய்ப்பு!
ஜாதகத்தில் ஏழாமிடம் ஸ்திரமான ராசியாக இருந்து, அதில் ஸ்திர கிரகங்கள் வீற்றிருந்தால் உள்ளூரிலேயே வரன் அமையும்!

கட்டளையிடும் யோகம் யாருக்கு அமையும்!
சந்திரன் முழு மதியாக மீன ராசியில் இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்ட வேளையில் பிரிந்த ஜாதகருக்கு அரசியலில் செல்வாக்கும், உயர் பதவியும், இவர் இட்ட கட்டளையை நிறைவேற்ற வேலையாட்களும் அமைந்து அரசனைப் போல வாழவார்கள்.

ஆவணி மாதம், சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியனுக்குப் பொங்கல் இட்டு வழிபாடு செய்தால் மகிழ்ச்சி பொங்கும். செல்வம், செல்வாக்கு பெருகும். எல்லா ஞாயிற்றுக் கிழமையும் முடியா விட்டாலும், கடைசி ஞாயிறு அன்று விரதமிருந்து பொங்கல் இடுவது நல்லது.
சூரிய கிரணங்களை வழிபட்டால் காரியங்கள் வெற்றிபெறும்.

ஆவணி மாதம்!
பிட்டுக்கு மண் சுமந்து பரமன் பிரம்படி பட்ட திருவிளையாடல் நடந்த மாதம் ஆவணி மாதம். இந்த தினம் மதுரை ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும். அதில் கலந்து கொள்பவர்கள் சகல பாக்கியங்களையும் பெறுவார்கள். 
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழச்சீவல்பட்டி ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அன்றைய தினம் சிவபெருமான் தலையில் வெள்ளிக்கூடயையும், மண் வெட்டியையும் வைத்து புட்டுக்கு மண் சுமந்து வருவது போல நகரத்தார் பெருமக்கள் மிகச் சிறப்பாக விழாக் கொண்டாடுகிறார்கள்.
 மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும், ஆண்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு முறையாக இறைவனை வழிபாடு செய்தால் காலம் முழுவதும் காத்திருந்தும் கல்யாணம் ஆகவில்லையே என்ற கவலை தீரும். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று ஆவணி மூலத்தன்று சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் தீர்ந்து கனிவான வாழ்க்கை அமையும்!.

மேஜை விரிப்புகள்!
சாப்பிடும் மேஜையின் மீது விரிக்கும் மேஜை விரிப்புகளில் விலங்குகளின் படங்களைத் தவிர்ப்பது நல்லது. தங்கம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இடம் பெற்ற விரிப்புகள், அதில் பல விதமான கனி வகைகள் அமைந்த மாதிரி இருந்தால் அதிர்ஷ்டம் கிட்டும். கனிகளைப் பார்ப்பதால் கனிவான வாழ்க்கையும், பற்றாக்குறை இல்லாத உணவும் கிடைக்க வழி பிறக்கும் (நன்றி: தமிழ் மாத ஜோதிடம்).
வாஸ்துப்படி வீட்டு வாசல் அமைப்பது எப்படி?
வீட்டின் வாசற்படி அந்த வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் குடும்பத்தலைவரின் ஜாதகத்திற்கு ஏற்றவாறு அமைந்தால்தான் ஏற்றமான, வளமான வாழ்வு அமைந்து, வருமானமும் வந்து சேரும்.
கட்டிடத்தின் நிலை வைக்கும் நேரம் மிக முக்கியமானது. நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம், லக்னம் மற்றும் அரசு பட்சியும், ஹோரையும் சிறப்பாக அமைந்தால், வீடு கட்டியது முதல் வியக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்படும்.
கட்டப்போகும் வீட்டின் நீளத்தை அளந்து அதை 9 பங்கு செய்து வலது புறத்தில் 5 பங்கு ஒதுக்கி நடுப்பங்கில் வாசல் அமைத்தால் அந்த வீட்டில் அதிக சுப காரியங்கள் நடைபெறும் என்று கூறுவார்கள்.
அதைக் குறிக்கும் பழம் பாடல்:
" வீட்டினளவை விளங் கொன்பான் கூறு செய்து
நீட்டியளந்த நிலைக்கோல்- கூட்டிடுவாய்!
வாமத்தே யைத்தும், வலத்தே யொரு மூன்றாய், 
சோமத்தே வாசலிடச் செப்பு என்பதாகும்."
(நன்றி: தமிழ் மாத ஜோதிடம்). 
மனக்குழப்பம் அகல!
ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து  அல்லது பகை கிரஹத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, 'ஓம் சந்திராய நமஹ' என்று ஒன்பது முறை சொல்வது நல்லது. மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு , தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிடச் சொல்வது நல்லது. திங்கட்கிழமை தோரும் செய்யலாம்!.

கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் என்னில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால் , சந்திர பகவான் அருளும், மனச்சாந்தியும் கிட்டும்!.

  • பாதுஷா செய்ய!

சர்க்கரையை இரட்டைக் கம்பிப் பாகு வரும் வரை காய்ச்சியதும், அரை மூடி எலுமிச்சம் பழச் சாற்றைப் பிழிந்து விட்டால் பாகு திரவ நிலையிலேயே இருக்கும். பாதுஷாக்களை பொறித்த பிறகு இந்தப் பாகில் ஊற வைக்கலாம்!


  • முத்து முத்தான பூந்திக்கு!

  • கடலை மாவில் ஒரு ஸ்பூன் வெது வெதுப்பான நெய் அல்லது எண்ணெய்யை கலந்து பூந்திக்கு மாவு கலந்து, தேய்த்தால் பூந்தி முத்து முத்தாக வரும்.
  • பூந்தி தேய்க்கும் கரண்டியில் முதலில் சிறிதளவு எண்ணெய்யை நன்றாகத் தடவி விட்டு, மாவை சிறு கரண்டியால் எடுத்து விட்டு, லேசாகத் தட்டினால் முத்து முத்தாக வரும்!
  • பூந்தியில் வால் வாலாக வராமல் இருக்க, ஒவ்வொரு முறை தேய்த்த பின்னர், கரண்டியின் அடிப்பாகத்தில் ஒட்டியுள்ள மாவை ஈரத்துணியால் துடைத்து எடுத்து விட்டு, பின்னர் தேய்க்க வேண்டும்!( நன்றி: கோகுலம் கதிர்).